மண் வாசனை
Another Tamil poem coming your way, hope you like it... மண்ணக மடந்தை தன் செமபட்டை கூந்தலிற்கு எண்ணெய் தடவி, தீபஒளி திருநாள் அன்று வானம் பார்த்திருக்கிறாள். வருணனோ அவளை கண்டு மயங்கி பட்டாசு வாங்கிய சிறுவர் சிறுமியரின் பிரார்த்தனைகளுக்கு சற்றும் செவியளிக்காமல், தன் பூலோக காதலியின் வேண்டுதலுக்கு இணைய நீரை வரதட்சணையாக சமர்பித்தான். அவ்வையிரம் மழை துளியும், அவளது ஆயிரம் முடி இழைகள் ஒவ்வொன்றையும் மெதுவாக நெருங்கி, கட்டி அனைத்து முத்தமிட்டனர். கூந்தல் ஈரமானதும், சீயக்காவை எடுத்து தன் கூந்தல் முழுவதிலும் தடவினால், அதனால் உருவான நாற்றத்தினால் வருண பகவான் மயங்கி மேலோகத்திலிருந்து பூலோகம் வந்து விழுந்தான். Img : https://www.artst.org/rain-paintings/ ( Rain' by Vincent van Gogh)